இதயமிலா சிந்தனை
உன் இதயத்தில் என் சிந்தனையில்லை
உன் சிந்தனைக்கு ஏதோ இதயமில்லை
உன் மனதில் என் சுவடுகள் இல்லை
என் மனமெல்லாம் வடுக்கள் நிறைந்தன.
..
உன் நெஞ்சில் ஏனோ ஈரமில்லை
என் நெஞ்செல்லாம் பாரம் நிறைந்தது
உன் கனவில் ஏனோ நான் இல்லை
என் கனவெல்லாம் நீயே என்றானாய்